திருப்பத்தூர் இரயில் நிலையத்திற்கு எதிரில் எரியாமல் உள்ள உயர் கோபுர மின் விளக்கு

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு காந்தி ரோடு, இரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு கடந்த ஒரே வாரமாக எரியாமல் உள்ளது. திருப்பத்தூரில் மிக முக்கியமாக பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் இந்த பகுதியில் மின் விளக்கு எரியாமல் உள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதுடன் பெண்கள் மற்றும் முதியோர் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகத்தினர் இந்த பிரச்சினையை போர்கால அடிப்படையில் சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!