அதிமுகவுடன் ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை- பாமக தலைவர்

தனித்து போட்டியிடுவது குறித்து அதிமுகவுடன் ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், முடிவு எடுத்துவிட்டு தகவல் தெரிவித்ததாகவும் பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில்  செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் ஆளுமை குறித்து ராமதாஸ் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றார். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் மட்டும்  பாமக தனித்து போட்டியிடுவதாகவும், ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக தொடர்வதாகவும் ஜி.கே.மணி தெரிவித்தார்.

முன்னதாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுத்தாக்கலுக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும், வாக்குப்பதிவை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரை பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்தனர்.

Translate »
error: Content is protected !!