புதுச்சேரியில் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை

புதுச்சேரியில் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரியில் தடுப்பூசி பற்றாக்குறை என்பது இல்லை என்றார். தமிழக கல்வி வாரியத்தை புதுச்சேரி பின்பற்றுவதால் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பில் தமிழக அரசு எடுக்கும் முடிவை புதுச்சேரி அரசும் பின்பற்றும் என்றார்.

புதுச்சேரியில் பள்ளி திறப்பு எப்போது என்பது குறித்து கல்வி அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்தோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  மேலும் புதுச்சேரியில் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!