இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்… சீனா கடும் எதிர்ப்பு

பாகிஸ்தானை விட சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று பிபின் ராவத் கூறியிருந்தார். வடக்கு எல்லையில் சீனா தனது படைகளை குவித்து வருவதாகவும், அங்கு ஆபத்து அதிகம் என்றும் பிபின் ராவத் கூறியிருந்தார். இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இது பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான கருத்து என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மூத்த கர்னல் வு கியான் கூறியதாவது:

இந்திய அதிகாரிகள் சீன ராணுவ அச்சுறுத்தல் என்று கூறுவது ஊகங்கள் மட்டுமே. ஒருவரையொருவர் அச்சுறுத்தாமல், புவிசார் அரசியல் மோதலை தூண்டுவது பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது. இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இல்லை என்றார்.

Translate »
error: Content is protected !!