கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் உட்பட 3 பேர் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த பெண் உட்பட மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பெருநகரில் குட்காவை ஒழிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவின் பேரில் அனைத்து ஆய்வாளர்களும் குழுவாக சென்று வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நேற்று நுங்கம்பாக்கம் ஆய்வாளர் சேட்டு தலைமையில் போலீசார் சோதனை ஈடுபட்டு வந்தா போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இரு சக்கர வாகனத்தில் வைத்து கஞ்சாவை விற்பனை செய்த மூவரை கைது செய்தனர்.

Translate »
error: Content is protected !!