மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா

ஆரணியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டது.

Translate »
error: Content is protected !!