தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் மூன்று வயது குழந்தை பலி

டெல்லியின் மோதி நகர் பகுதியில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் மூன்று வயது குழந்தை உயிரிழந்தது.

இதுகுறித்து டெல்லி போலீசார் கூறியதாவது:-

பூங்கா ஒன்றில், 3 வயது சிறுமி லட்சுமி விளையாடிக் கொண்டிருந்த போது, கூட்டமாக வந்த நாய்கள் நாய்கள் குழந்தையை கடித்து குத்தறியுள்ளது. இச்சம்பவம் டிசம்பர் 17ஆம் தேதி பிற்பகல் 2.45 மணியளவில் நடந்துள்ளது.

நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உடனடியாக குழந்தை உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!