திருநெல்வேலி – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு

 

திருநெல்வேலியில் இருந்து அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக சென்னை தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முதல் இயங்க தொடங்கிய இந்த ரெயிலுக்கு பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் திமுகவினர், பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  புதிய ரயிலுக்கு மாலை அணிவித்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும், ரயில் ஓட்டுனர் மற்றும் டி.டி.ஆர். ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் , தென்காசி எம்.பி. தனுஷ்குமார், தொழிலதிபர் ஆர்.கே.காளிதாசன் மற்றும் வணிகர்கள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Translate »
error: Content is protected !!