இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்

தமிழக வடகடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி  திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழையும்,  புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எந்த வித முன்னெச் சரிக்கை அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை.

Translate »
error: Content is protected !!