டோக்கியோ பாராலிம்பிக்.. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 50 மீ துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கமும் , சிங்ராஜ் வெள்ளி பதக்கமும் வென்றனர்.

சிங்கராஜ் ஏற்கனவே 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்று தற்போது வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் உட்பட 15 பதக்கங்களுடன் இந்தியா 34 வது இடத்தில் உள்ளது.

Translate »
error: Content is protected !!