மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில், பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற இந்திய தடகள வீரர் பிரவீன்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெலியிட்டுள்ள வாழ்த்து செய்தி,
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன்குமாருக்கு பெருமை அளிக்கிறது. இந்த பதக்கம் அவரது கடின உழைப்பு மற்றும் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பின் கிடைத்தது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். என பிரதமர் பதிவிட்டார்.