நாளை சமூக நீதி கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம்


சமூக நீதி கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம் நாளை சென்னை தலைமை 
செயலகத்தில் நடைப்பெறுகிறது.சமூகச் சீர்திருத்தத் துறை உறுப்பினர் செயலர் 
தலைமையில்  நடைபெறும் கூட்டத்தில், சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் 
தலைவர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா
 என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழக அரசால் 'சமூகநீதிக் கண்காணிப்புக் குழு' 
அமைக்கப்பட்டதும்இந்த கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், 
பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக 
முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும், வழிகாட்டும், 
செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்வதோடு, சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், 
உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும் எனவும், இந்த்ஜ குழுவில் 
அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள் எனவும், 
சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளினையொட்டி தமிழக முதல்வர் ஏற்கனவே 
அறிவித்துள்ளார்.
Translate »
error: Content is protected !!