ஆர்ப்பரிக்கும் சின்னச்சுருளி

ஆண்டிப்பட்டி அருகே ஆர்ப்பரிக்கும் சின்னசுருளி அருவி ரம்மியமான சூழலை பிரதிபலித்து வருகிறது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள  சின்னசுருளி அருவியில், கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக தற்போது வரையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக அருவிக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஆட்கள் நடமாட்டம் இன்றி வனப்பகுதிக்குள் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டும் சின்னசுருளி அருவி காண்பதற்கே ரம்மியமாக உள்ளது.

Translate »
error: Content is protected !!