தவறு செய்தவர்கள் மீது புகாரின் அடிப்படையில் சோதனை

 

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் புகாரின் அடிப்படையில் தான் சோதனைகள் நடைபெறும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கைவிடப்பட்ட மேம்பால பணிகளை மீண்டும் துவங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழைக்காலம் இன்னும் முழுமையாக  முடிவடையாத காரணத்தினால் சாலை விரிவாக்க பணிகள் முடிவடையால் உள்ளது என்றார். மேலும் தாருக்கும்,  தண்ணீருக்கும் ஒத்துப் போகாது என்பதால் தற்காலிகமாக பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!