மொட்டை போட்டு அஞ்சலி

 

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படைத் தளபதி பிபின் ராவத் துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நெல்லையில் பலர் மொட்டை போட்டு அஞ்சலி செலுத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு உதகை குன்னூர் அருகே இந்திய ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார் இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் அருகே தாமிரபரணி நதிக்கரையில் முப்படை தளபதி பிபின் ராவத் அதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் மொட்டை போட்டு தங்கள் அஞ்சலியை செலுத்தினர் மேலும் அவரது படத்திற்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!