செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

 

சென்னை வியாசர்பாடி பகுதியில் நேற்றிரவு செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரு நபர்களை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் ரகுநாத் உட்பட 3 பேர் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை பிடித்து வைத்திருப்பதாக வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வியாசர்பாடி போலீசார் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த இம்ரான் (21) மற்றும் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஜீனேஸ்வரன் (18) ஆகிய இருவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட இருவரிடம் இருந்து 6 ஆன்டிராய்டு செல்போன்கள் செல்போன் பறிப்புக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது

 

Translate »
error: Content is protected !!