படப்பை குணாவின் கூட்டாளிகள் இருவர் கைது

பிரபல ரவுடி படப்பை குணாவின் வலதுகரமாக செயல்பட்டு வந்த  தலைமறைவான போந்தூர் சேட்டு மற்றும்  குணாவின் கூட்டாளியான மாம்பாக்கம் பிரபு கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை,  கட்டப் பஞ்சாயத்து ஆகிய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் சரகத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவர் தற்போது பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைக்கபட்டார். இந்த நிலையில், படப்பை குணாவின் வலதுகரமாக செயல்பட்டு வந்த  போந்தூர் சேட்டு, மாம்பாக்கம் பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்…

Translate »
error: Content is protected !!