நெருப்பு எரிந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இரு குழந்தைகள் மீட்பு

அமெரிக்காவில், நெருப்பு கொளுந்து விட்டு எரிந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இரு குழந்தைகளை மீட்டவரை காவல்துறையினர் வெகுவாக பாராட்டியுள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் கடந்த இரு தினங்களுக்கு முன் தீப்பற்றியது. இதனை அந்த வழியாக காரில் சென்றபோது பார்த்த நபர் ஒருவர், குழந்தைகளின் அழுகுரல் சத்தம் கேட்டு வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் சத்தம் வந்த ஜன்னல் வழியாக சென்ற அவர் கண்ணாடியை உடைத்து, இரு குழந்தைகளையும் பத்திரமாக மீட்ட நிலையில் அதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி, காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!