இந்தியாவில் 75% பேருக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தல்

நாடு முழுவதும் 75 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கு   பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திடும் வகையில், அதுகுறித்த விழிப்புணர்வுடன் தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்பயனாக இன்று 75 சதவீதத்திற்கும் அதிகமான தகுதியுடைய இந்தியர்கள், இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்தநிலையில்  இந்த தடுப்பூசி திட்டம் வென்றி பெற உறுதுணையாக இருந்த  நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டர் வாயிலாக பாராட்டு தெரிவித்துள்ளார்

Translate »
error: Content is protected !!