உத்தரபிரதேசம்.. லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறை.. பத்திரிகையாளர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள பன்வீர்பூர் கிராமத்தில் நேற்று நடந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர். அதில் 4 பேர் விவசாயிகள். இந்நிலையில், செய்தி சேகரிக்க சென்ற உள்ளூர் பத்திரிகையாளர் ராமன் காஷ்யப் என்பவர் தற்போது உயிரிழந்தார்.

இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பன்வீர்பூர் கிராமத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று காலை உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களைச் சந்தித்தபோது கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!