வருமுன் காப்போம் திட்டம்- நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

வருமுன் காப்போம் என்ற புதிய மருத்துவ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் மாவட்டம் வாழப்பாடியில் துவக்கி வைக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலையில் இணை நோய் உள்ளவர்க ளுக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவம் அளிக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம்  இணை நோய் பாதித்தவர்களுக்கு வீடு தேடி மருத்துவம் வழங்கி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, தங்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று கூட தெரியாமல் இறுதி கட்டத்தில் உயிருக்கு அதிகளவில் மக்கள் போராடி வருகின்றனர். இதனை தடுக்க வருமுன் காப்போம் என்ற திட்டத்தின் மூலம்  தமிழ்நாடு சுகாதாரத்துறை சிறப்பு மருத்துவ குழுவினருடன் கிராமம் கிராமமாக முகாம் அமைத்து முழு உடல் பரிசோதனை நடத்த உள்ளனர். இத்திட்டம் நாளை தொடங்கவுள்ளது.

 

 

 

 

 

 

 

Translate »
error: Content is protected !!