திம்மம் மலைப்பாதையின் 9-வது கொண்டை ஊசி வளைவில் செண்டு மல்லி பூ ஏற்றி வந்த லாரி பழுதடைந்து நின்றதால், தமிழகம் கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து சுமார் இரண்டு மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இருந்து சத்தியமங்கலத்திற்கு செண்டுமல்லி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திம்மம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையின் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக லாரி பழுதடைந்து நின்றது. இதனால் திம்மம் மலைப்பாதை வழியாக வந்த கனரக வாகனங்கள் செல்லமுடியாமல் சாலையில் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார், கிரேன் மூலம் லாரியை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.