தனியார் விடுதியில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்..

திருவள்ளூர்  மாவட்டம் பூந்தமல்லி அருகே தனியார் விடுதியில் சாப்பிட்ட பெண்களுக்கு வாந்தி மயக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தமல்லி அடுத்த ஜமீன் கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளனர். இன்று மதியம் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பிறகு திடீரென வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கத்தால் அவதியுற்றனர். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவர்களை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, திருவள்ளூர், நேமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இடத்திற்கு ஏற்ப வாந்தி மயக்கத்தால் அவதியுற்ற பெண்களை அனுமதித்தனர் பூந்தமல்லியில் மட்டும் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்கள் சாப்பிட்ட உணவில் ஏதாவது இருந்ததா அல்லது தரம் இல்லாத உணவு சாப்பிட்டதால் இதுபோன்ற வாந்தி, மயக்கம் ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள்  தங்கியிருந்த விடுதியில் 700க்கும் மேற்பட்ட பெண்கள் வாந்தி மயக்கத்தால் அவதியுற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Translate »
error: Content is protected !!