கரும்பு தோட்டங்களில் உலா வரும் காட்டு யானை

திருத்தணி அருகே கரும்பு தோட்டங்களில் உலா வரும் காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தமிழக எல்லையில் உள்ள ஈச்சம்பாடி பகுதியில் முகாமிட்டுள்ளன. அவ்வப்போது ஹாயாக உலா வரும் காட்டு யானைகள், அருகாமையில் உள்ள கரும்பு தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசமும் செய்து வருகின்றன. இதனால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!