பாஜகவில் இணைந்த 6 நாட்களில் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரசில் இணைந்த எம்.எல்.ஏ.

காங்கிரஸ் ஆளும் மாநிலமான பஞ்சாபில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே, ஹர்கோவிந்த்புராவின் காங்கிரஸ் எம்எல்ஏ பல்விந்தர் சிங் லட்டி மற்றும் எம்எல்ஏ பதேஜங் சிங் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தனர்.

இந்நிலையில் பாஜகவில் இணைந்த 6 நாட்களில் எம்.எல்.ஏ. பல்வீந்தர் சிங் லடின் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று இரவு மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். பாஜகவில் சேர்ந்த 6 நாட்களில் அக்கட்சியில் இருந்து விலகிய எம்எல்ஏ மீண்டும் காங்கிரஸில் இணைந்த சம்பவம் பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!