காலை முதல் மழை பெய்து வருவதால் மகசூல் பாதிப்பு?

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருவதால் மகசூல் பாதிக்கப்படுமோ என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட  வெளிப்பாளையம்,  நாகூர், திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், தெருவோர வியாபாரிகள் மழையால் சிரமம் அடைந்துள்ளனர். மேலும், பல இன்னலுக்கு மத்தியில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ள நிலையில், மகசூல் இழப்பு ஏற்படுமோ என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்

Translate »
error: Content is protected !!