தலிபான்கள் இந்தியாவை நோக்கி நகர்ந்தால் வான்வழித் தாக்குதல் நடத்தத் தயார் – யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

தலிபான்கள் இந்தியாவை நோக்கி நகர்ந்தால் “வான்வழித் தாக்குதல் நடத்தத் தயார்” என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியது,

இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு சக்தி வாய்ந்ததாக மாறி வருகிறது. இந்தியாவை நோக்கி கண்களை உயர்த்த எந்த நாடும் துணிவதில்லை. இன்று பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தலிபான்களால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், தாலிபான்கள் இந்தியாவை நோக்கி நகர்ந்தால், வான்வழித் தாக்குதல் நடத்தத் தயாராக உள்ளது என்றார்.

Translate »
error: Content is protected !!