இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,806 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,806 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடி 9 லட்சம் 87 ஆயிரம் 880 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 39,130 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 3 கோடி 01 லட்சம் 43 ஆயிரம் 850 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 4 லட்சம் 32 ஆயிரம் 041 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 581 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு, இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 11 ஆயிரம் 908 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் இதுவரை தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கை 39 கோடி 13 லட்சத்து 40 ஆயிரம் 491 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!