ஈரோட்டில் ம. நீ.ம. மகளிர் அணி ஆலோசனை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஈரோடு வடகிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக ஆலோசனைக் கூட்டம், மாநிலச் செயலாளர் மூகாம்பிகை ரத்தினம் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோபி மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் மிக அதிக அளவில் மகளிரையும், புதிய உறுப்பினர்களையும் கட்சியில் இணைக்க மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடத்தவும், வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து கட்சிக்கு ஆதரவு திரட்டவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து இக்கூட்டத்தில் பல்வேறு வகைகளில் விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம். சிவக்குமார், கோபி நகர செயலாளர் ஜி.சி. சிவக்குமார், கோபி ஒன்றிய செயலாளர் என்.கே. பிரகாஷ், மாவட்ட மகளிரணி சுதா செல்வராஜ், என்.கே. சக்தி கலந்து கொண்டனர்.

மேலும், மகளிர் அணி சார்பில் கலையரசி, என். பார்வதி, சாந்தாமணி, எ.ருக்குமணி, எஸ். மஹபூப்னிஷா, அஞ்சலி, பி. ஆனந்தி, எஸ். செல்வி, எ. அகிலாண்டேஸ்வரி, எம். ராஜேஸ்வரி, எம்.சாந்தி, பி. புஷ்பா, கே. மேகலா, எ.சரஸ்வதி வழக்கறிஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் நவீன்குமார், ஐ டி நகர செயலாளர் நா. முத்துக்குமார் கொடிவேரி பேரூராட்சி நடராஜன், எஸ். சிவா பங்கேற்றனர்.

Translate »
error: Content is protected !!