செங்கல்பட்டு அருகே தரைப்பாலங்களில் வெள்ளம் : போக்குவரத்து துண்டிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அருகே குருவன்மேடு, வேண்பாக்கம், வடக்குப்பட்டு, ரெட்டிபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனைத்து தேவைக்கும், செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், சென்னைஉள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு குருவன்மேடு மற்றும் ரெட்டிப்பாளையம் பகுதிகளில் தரைப்பாலங்கள் உள்ளன.

இதில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், தென்னேரி ஏரி நிரம்பி . தற்போது அந்த ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறுகிறது. இந்த நிலையில், குருவன்மேடு, ரெட்டிபாளையம் ஆகிய தரைப்பாலங்களை வெள்ளம் மூழ்கடித்து பாய்ந்தோடுகிறது. இதனால் குருவன்மேட்டிலிருந்து செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளுக்கு வரும் பள்ளி மாணவர்களும், வேலைக்குச் செல்பவர்களும் கடும் அவதிப்படுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மழையின்போதும் இந்த சாலை மழைநீரால் துண்டிக்கப்படுகிறது. தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தாலும் அதைத் தாண்டி மழைநீர் செல்கிறது. தற்போது மழை நீரால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் 5 முதல் 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரகடம் பாலூர் போன்ற பகுதிகளுக்கு சென்று செங்கல்பட்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மழைக்குப்பின் இந்த சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!