கர்நாடகாவில் புதிதாக 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகாவில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29,34,624 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 28,76,377 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 21,133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். இதனால் , மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 37,088 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!