கொடைக்கானலில் மதுபான இருப்பு இல்லாததால் மதுப்பிரியர்கள் ஆவேசம்.. பிரதமர் மற்றும் முதலமைச்சருக்கு கோரிக்கை..!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த சூழலில் டாஸ்மாக் கடைகள் திறக்கலாம் என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி திறக்கப்பட்டது ..அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றும் சில இடங்களில் அரசின் உத்திரவை காற்றில் பறக்க விட்டனர் ..தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மதுபான கடைகளில் மதுபானம் இருப்பு இல்லாததால் மதுப்பிரியர்கள் ஆவேசம் அடைந்தனர்.

தொடர்ந்து மதுக்கடை ஊழியர்கள் பீர் மட்டுமே இருப்பதாக தெரிவித்து அனுப்பி விடுகின்றனர்..இதனால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர்கள் குறைந்த விலையிலான மது இல்லை என கூறினால் கடையை அடித்து நொறுக்குவோம் எனவும் பிரதமர் மற்றும் முதலமைச்சருக்கு மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறைந்த விலையிலான மதுபானங்கள் பதுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

 

Translate »
error: Content is protected !!