சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் யொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இருந்து பூ, மங்கல பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது

சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் யொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இருந்து பூ மற்றும் மங்கல பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவானது வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் இந்த விழாவிற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பூக்களை சமயபுரம் மாரி அம்மனுக்கு சாற்றி வழிபாடு செய்வர்பூச்சொரிதல் நிறைவாக சித்திரைத் தேரோட்டம் நடைபெறும்,

இந்நிலையில் பூச்சொரிதல்  திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் சார்பாக திருக்கோயில் ரெங்க விலாச மண்டபத்திலிருந்து பூ பழங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது, இதில் திருக் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டு சமயபுரம் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர்

Translate »
error: Content is protected !!