சாயல்குடி அருகே மின்சாரம் தாக்கி 50 செம்மறி ஆடுகள் பலி

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயமுருகன் என்பவர் தனக்கு சொந்தமான 250 செம்மறி ஆடுகளை வளர்த்து பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு மீண்டும் தனது கிராமத்தின் அருகே வயல்வெளியில் கூடாரம் அமைத்து இரவு நேரத்தில் அடைத்துள்ளார். ஆனால், ஆடுகளை அடைக்க  அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களின் மேல் பகுதியில் உயரழுத்த மின்கம்பி சென்றுள்ளது.

இரவு நேரத்தில் உயர் அழுத்த மின் கம்பிகளில்  ஏற்பட்ட உராய்வின் காரணமாக மின் கம்பி கூடாரத்தின் மேல் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக 50 ஆடுகள் பலியாயின.

மேலும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற மின்சார வாரியம் மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் உயிரிழந்த ஆடுகளை கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர். இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Translate »
error: Content is protected !!