சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுனருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை

வேலூர்,

வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு(30), ஆட்டோ டிரைவர். இவர் தனது உறவினரின் மகள்களான 7 மற்றும் 9 வயதுடைய இரு சிறுமிகளை கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியின் சகோதரியையும் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சுரேஷ்பாபுவை கைது செய்தனர். இந்த வழக்கை வேலூர் சிறப்பு போக்சோ கோர்ட் நீதிபதி செல்வம் விசாரித்து, சுரேஷ்பாபுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேற்கு வங்க வாலிபருக்கு 20 ஆண்டு சிறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை பனியம்பள்ளியில் தங்கி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேற்கு வங்க வாலிபர் ரெபியுல் மண்டல் (26). கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அதே பகுதியில் வசித்து வந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கில் ரெபுயுல் மண்டலுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

Translate »
error: Content is protected !!