சென்னை பல்லாவரத்தில் மிதிவண்டியை மட்டும் குறி வைத்து திருடும் இளைஞர் கைது

சென்னை பல்லாவரம் அருகே மிதிவண்டியை மட்டும் குறி வைத்து திருடும் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருநீர்மலையை சேர்ந்த குமார் என்பவர் குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள சைக்கிள்களை திருடி, அதனை வடமாநிலத்தவர்களுக்கு குறைந்த விலையில் விற்று வந்துள்ளார். இந்த நிலையில், பம்மல் பகுதியில் ராஜகோபால் என்பவரது சைக்கிள் திருடு போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் திருடியவர் குமார் என்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து 40சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மேலும் 40 சைக்கிள்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும், அதன் உரிமையாளர்களை கண்டறிவதில் காவல்துறையினருக்கு சவாலாக அமைந்துள்ளது.

Translate »
error: Content is protected !!