திண்டுக்கலில் ஒரே நாளில் 2,100 வழக்குகள் பதிவு..! போலீசார் தீவிர சோதனை..!

திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக ஒரே நாளில் 2100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சாலை விதிகளை மீறுபவர்களை கண்டறியும் பொருட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி, அதிகவேகத்தில் சென்றதற்காக 16 வழக்குகள், அலைபேசியில் பேசியபடி வாகனத்தில் சென்றதற்காக 199, சிக்னலில் விதி மீறியதற்காக 67, அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றிச் சென்றதாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

அதே போல் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றியதாக 119, ெஹல்மேட் அணியாமல் சென்றதற்காக 1014, சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 681 என 2100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது, என போலீசார் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!