திருச்சியில் தாய் – மகன் தற்கொலை! கடன் பிரச்சினை காரணமா?

திருச்சி அருகே தாய் – மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சிமாவட்டம் நச்சுலூரை சேர்ந்தவர் செல்லம்மா ( 65). இவர் தனது மகன் ராஜா என்கிற ரமேஷ் பாபு ( 40) மற்றும் மருமகள் பேரக்குழந்தைகளுடன், ஸ்ரீரங்கம் பெரியார் நகர் அருகே கணபதி நகர் 3-வது கிராஸில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

ராஜாவின் மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூறுக்கு சென்று இருந்த நிலையில் கடந்த இரு தினங்களாக, அவர்களின் வீடு உள்புறம் சாத்தப்பட்டிருந்தது; கதவும் திறக்கப்படாமலையே இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர், ஜன்னல் வழியே உள்ளே பார்த்தபோது, இறந்த நிலையில் உடல்கள் கிடந்துள்ளன. இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் இறந்த உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த செல்லம்மா மற்றும் அவரது மகன் ராஜா இருவரும் சேர்ந்து, வாழை விவசாயம் செய்து வந்ததாகவும், அதற்காக அதிகளவில் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. கடனை அவர்களால் முழுமையாக திருப்பி செலுத்த முடியாததால் மனமுடைந்த இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Translate »
error: Content is protected !!