திருச்சியில்  5 வயது சிறுவன் சாக்கடை கால்வாயில் விழுந்து உயிரிழப்பு

திருச்சி மாநகராட்சிகுட்பட்ட 49 வது வார்டு அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் .இவர்  பெயிண்டராக பணியாற்றி வருகிறார்.இவரின் மனைவி நளினி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். அவர்களின் 5 வயது மகன் யஸ்வந்த் .

வீட்டின் அருகில் நேற்று மாலை விளையாட சென்றார்.நீண்ட நேரமாகியும் யஷ்வந்த் வீட்டிற்கு வராததால் அவரின் உறவினர்கள் நீண்ட நேரமாக அவரை தேடியுள்ளனர்.அப்போது  வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் தேடிய போது சுமார் 5 அடி ஆழமுள்ள  கால்வாயில் சிறுவன் யஷ்வந்த் பிணமாக கண்டெடுக்கப்பட்டான்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தில்லை நகர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த சாக்கடை கால்வாயின் அருகே உள்ள கொய்யா மரத்தில், கொய்யா பழம் பறிக்கச் சென்றதில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அந்த பகுதியில் பல ஆண்டுகளாக சாக்கடை மூடப்படாமல் இருந்து வருகிறது.பல முறை புகார் அளித்து. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்றும் அதனால் தான் சிறுவன் உயிரிழந்துள்ளான் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஐந்து வயது சிறுவன் கால்வாயில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!