திருப்பத்தூர் மாவட்டத்தில் லேசான நில அதிர்வால் பொதுமக்கள் அச்சம்

திருப்பத்தூர் மாவட்டம்.,

திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குரிசிலாப்பட்டு, கந்திலி , நாட்றம்பள்ளி, அச்சமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று  இரவு 8.40 மணி அளவில் லேசான நில அதிர்வு உண ஏற்பட்டது.

அந்த அதிர்வின் போது செல்போன்வைப்ரேசன்அதிர்வுகள் போன்று உணர்ந்ததாக பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர். மேலும் நில அதிர்வின் போது பயங்கர சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பீதியுடன் வீட்டின் வெளியே ஓடினார்கள். ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ விளக்கம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

Translate »
error: Content is protected !!