தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 5 பெண்கள் பலி

தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் பலியாகினர். 15 பேர் படுகாயமடைந்தனர்.

விவசாயக் கூலி வேலை செய்வதற்காக குட்டி யானை என்றழைக்கப்படும் வாகனத்தில் 35 பேர் பயணித்தனர். வாகனம் மணியாச்சி அருகே வந்தபோது அதீத வேகம் மற்றும் பளு காரணமாக பாலத்தில் திரும்ப முடியாமல் நிலை தடுமாறி அருகிலிருந்த கண்மாயில் கவிழ்ந்தது. இதில் 5 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தோர் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

Translate »
error: Content is protected !!