தேனியில் 50 ஆண்டுகாலம் தனியார் வசமிருந்த 99 சென்ட் நிலம் மீட்பு

தேனி மாவட்டம் தேனி நகரில் பெரியகுளம் சாலையில் உள்ள அன்னஞ்சி விளக்கு அருகில் உள்ள தனியார் அரிசி ஆலை நிறுவனத்தில் தமிழக அரசு நெடுஞ்சாலை துறைக்கு  சொந்தமான சுமார் 99 சென்ட் இடம் கடந்த 50 ஆண்டு கால ஆக்கிரமிப்பில் இருந்தது.

இந்த ஆக்கிரமிப்பு இடத்தை நெடுஞ்சாலைத் துறை மற்றும் வட்டாட்சியர் குழு மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் தலைமையில் வட்டாட்சியர் பிரதீபா மற்றும் நகர வருவாய் ஆய்வாளர் நாகராஜ் ஊஞ்சம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் கோட்ட காவல்ஆய்வாளர் குருவதாய் சார்பு ஆய்வாளர் கௌதம் மற்றும் காவல் துறையை சார்ந்தவர்களும் உடனிருந்து இடத்தை மீட்டனர்

Translate »
error: Content is protected !!