தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய தேடப்பட்டு வந்த குற்றவாளி தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்ததார்

தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரசீது என்பவர் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவன் உதித் சூர்யா என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து நடைபெற்ற விசாரணையில் முறைகேடு உறுதிசெய்யப்பட்ட நிலையில் மாணவர் உதித் சூர்யா அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் சென்னை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அவரது பெற்றோர் என இதுவரையில் 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளி வந்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதி தமிழக சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரசீது(45) என்பவர்  ஓராண்டுக்கு மேலாக கைது செய்யப்படாத நிலையில் இன்று (07-01-2021ந்தேதி)தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் சரண் அடைந்தார். இதனை தொடர்ந்து நீதிபதி அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 

Translate »
error: Content is protected !!