தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!

தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் பங்க் முன்னிலையில் ஆர்ப்பாட்டம்.

இந்தியா முழுவதிலும் பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாயை  எட்டி உள்ளதால் அனைத்து பொருட்களின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. தொடர்ந்து மத்திய அரசின் தவறான கொள்கை முடிவால் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்தும், அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் பெட்ரோல் டீசல் விலையை உயர்வை குறைக்கக் கோரியும் நோய்தொற்று தடுப்பூசி மருந்துகளை தமிழகத்திற்கு அதிகம் வழங்க கோரியும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் பெரியகுளம் அருகே உள்ள பெட்ரோல் பங்குகள் முன்னிலையில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Translate »
error: Content is protected !!