நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண்ணை அமெரிக்க கணவரே கூலிப்படை வைத்து போட்டுத்தள்ளியது அம்பலம்.. போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம்..!

நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண் விபத்தில் இறந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது அமெரிக்க கணவரால் கூலிப்படை மூலம் வேனால் மோதி கொலை செய்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபாரதி. இவர் நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண் ஆவார். இவரது கணவர் விஷ்ணு பிரகாஷ். அமெரிக்காவில் வேலை பார்க்கிறார். 2005ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்னர் ஜெயபாரதி கணவருடன் அமெரிக்காவுக்கு சென்று விட்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. திருமணத்திற்கு பின் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு கணவரைப் பிரிந்து அமெரிக்காவில் இருந்து திருவாரூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். ஜெயபாரதி சொந்த ஊரிலேயே தற்காலிகமாக அஞ்சல் துறையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் ஜெயபாரதி தப்பளாம்புலியூரில் நடந்த சாலை விபத்தில் சிக்கி ஜெயபாரதி உயிரிழந்தார். அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவர் அவர் திட்டமிட்டு சரக்கு வாகனம் ஏற்றிக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஆதாரத்துடன் அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சந்தானத்தின் உதவியின் பேரில் திருவாரூர் எஸ்பியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனையடுத்து எஸ்பி மறு விசாரணைக்கு உத்தரவிட்டார். இதில் ஜெயபாரதி கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சித்தகவல்கள் போலீசாரின் விசாரணையில் வெளிவந்துள்ளது.

அது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறியதாவது, ‘‘ஜெயபாரதி அமெரிக்காவில் உள்ள தனது கணவருக்கு அனுப்பிய நோட்டீசால் அவரது வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணு மனைவி ஜெயபாரதியை தீர்த்துக்கட்ட தனது உறவினர்களான ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோருடன் திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தால் விபத்து என்று வழக்கை முடித்து விடுவார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதன்படி பழைய வாகனம் ஒன்றை 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்து பவித்திர மாணிக்கத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் விலைக்கு வாங்கியுள்ளார்.

வாகனத்திற்கு ஓட்டுனராக பிரசன்னா என்பவர் இருந்துள்ளார். அந்த வாகனத்தில் சென்று ஜெயபாரதி மீது மோதி கொலை செய்ய நோட்டம் விட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை காலையில் வேலைக்கு சென்ற ஜெயபாரதியை வாகனத்தை மோதியுள்ளனர். அதோடு நிற்காமல் எதிரில் நின்ற பனைமரத்தில் அவரது உடலை மீண்டும் மோதி நசுக்கியுள்ளனர்.

அதன் பின்னர் ஜெயபாரதியின் உடலை ங்கிருந்து எடுத்து வந்து சாலையில் போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். அது தொடர்பாக கொலைக்கு மூளையாக இருந்த வாகனத்தின் உரிமையாளர் செந்தில்குமார், ஓட்டுனர் பிரசன்னா ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கு அமெரிக்காவில் இருந்தபடி திட்டம் போட்டுக் கொடுத்த ஜெயபாரதியின் கணவர் விஷ்ணுபிரகாஷை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாட திருவாரூர் மாவட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த கொலைக்கு உதவியாக இருந்த ராஜா, ஜெகன், செந்தில் குமார் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை தேடிவருகின்றனர். நடிகர் சந்தானத்தின் உதவியாலும், அவரது உறவினர்களின் சாமர்த்தியத்தாலும் கொலை வழக்கில் துரிதமாக துப்பு துலங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!