பஞ்சாபின் லூதியானாவில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

பஞ்சாபின் லூதியானாவில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டு பள்ளிகளும் ஆகஸ்ட் 24 வரை மூடப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் தங்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தொற்று பரவுவதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து தினசரி சோதனை நடத்தப்படும் என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!