பத்திரிகையாளரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி – பத்திரிகையாளர்கள் காவல்துறை ஆணையரிடம் புகார்

டி.வி.எஸ் டோல்கேட்டில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளரை பணி செய்ய விடாமல் தடுத்து  தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகிஉரிய நடவடிக்கை எடுக்க கோரி பத்திரிகையாளர்கள் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார்.

 திருச்சி அதிமுக மாவட்ட மாநகர் செயல்வீரர்கள் கூட்டம் டி.வி.எஸ் டோல்கேட்டில் நடைபெற்றதுஇந்த கூட்டத்தில் ஒரு பிரிவினர் சலசலப்புடன் வெளியேறி சென்றனர்,அப்போது செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர் ஒருவர் அதனை படம் பிடிக்கும் போது அதிமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் ஒருமையில் பேசி தாக்கினார். மேலும் எடுத்த வீடியோவை உடனடியாக செல் போனில் இருந்து அழிக்க சொல்லி மிரட்டி உள்ளார்,முடியாது என செய்தியாளர் மறுத்தும்  செல்போனை பிடிங்கி வீடியோவை அழித்து உள்ளனர்.

 தான் செய்தி நிறுவனத்தை சேர்ந்தவர் என்று கூறியும் தாக்குதல் நடத்தி தகாத வார்த்தையால் உன்னால் என்ன செய்ய முடியும் என்று வாக்கு வாதம் செய்துள்ளனர், மேலும் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்கு உள்ளே வந்து செய்தியாளர்களை மிரட்டியுள்ளனர்.

 இதுகுறித்து திருச்சி மாவட்ட செய்தியாளர்கள் ஒன்றிணைந்து மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!