புல்லட்டில் வந்த விநாயகர்: நீரில் கரைத்த பாஜகவினர்

நாகர்கோவிலில் பாஜக பிரமுகர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை புல்லட் பைக்கில் தூக்கி வந்து குளத்தில் கரைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரிமாவட்ட பாஜக பொருளாளர்.முத்துராமன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மூன்றடி அளவில் உள்ள விநாயகர் சிலையை புல்லட் பைக்கில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துவந்து அப்பகுதியில் உள்ள குளத்தில் கரைத்தனர். அதேபோல் இந்து முன்னணி சார்பில் தத்தையார் குளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிறிய,சிறிய வடிவில் வைத்திருந்த விநாயகர் சிலைகளை இந்து முன்னணி சார்பில் ஊர்வலமாக குடும்பத்துடன் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வந்து கோதையார் அணைக்கட்டில் விநாயகர் சிலைகளை கரைத்தனர்.இதில் மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை போலீஸ் பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைப்பெற்றது.மேலும் இந்துமகா சபா சார்பில் நாளை 250 க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைப்பெறும் என்பதால் போலீசார் அப் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Translate »
error: Content is protected !!