பொதுமக்கள் (Whats App) மூலம் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கலாம்.. “முழு விவரம்”

சென்னை பெருநகர காவல்,

கொரோனா தொற்று நோய் பரவலினால், பொதுமக்கள் தங்கள் குறைகளை காவல் ஆணையாளரை நேரடியாக சந்தித்து தெரிவிக்க முடியாத நிலையில், காவல் ஆணையரை 6369 100 100 என்ற கட் செவி (Whats App) எண்ணில்  காணொளி மூலம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு வாரமும்  திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மதியம் 12.00 மணிமுதல் 1.00 மணி வரை புகார்  தெரிவித்து பயனடையலாம்.

 அதன்படி, இன்று (12.05.2021) புதன்கிழமை மதியம் 12.00 மணிமுதல் 1.00 மணிவரை மேற்கண்ட கட்செவி  (WhatsApp) எண்ணில் காணொளி மூலம் காவல் ஆணையரிடம்  புகார் அளிக்க பொதுமக்கள் காணொளி மூலம் புகார் தெரிவித்து பயனடையும் படி சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Translate »
error: Content is protected !!