முதலமைச்சரின் செயலாளர் தற்கொலை முயற்சி… காரணம் என்ன?

முதலமைச்சரின் அரசியல் செயலாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக பணியாற்றி வருபவர் சந்தோஷ். இவர், கடந்த மே மாதம் 28ம் தேதி, எடியூரப்பா அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பெங்களூருவில் உள்ள டாலர்ஸ் காலனியில், மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சந்தோஷ் வசித்து வருகிறார். முதலமைச்சர் எடியூரப்பா செல்லும் இடங்களுக்கு எல்லாம் சந்தோஷும் உடன் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், நேற்றிரவு சந்தோஷ் தனது வீட்டின் அறையில் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணையில், அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. அவர் சிகிச்சையில் இருப்பதால், எதற்காக தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்பது தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Translate »
error: Content is protected !!